சனி, 2 அக்டோபர், 2021

1330.ஊடலுவகை

 

133.ஊடலுவகை

3.காமத்துப்பால்-3.2.கற்பியல்-3-2-133.ஊடலுவகை-1330

குறள் மூலம்

ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்

கூடி முயங்கப் பெறின்

வாசிக்க

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

தெளிவுரை

காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்; ஊடல் முடிந்தபின்

கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்

யாப்பிலக்கணம்



1329.ஊடலுவகை

 

133.ஊடலுவகை

3.காமத்துப்பால்-3.2.கற்பியல்-3-2-133.ஊடலுவகை-1329

குறள் மூலம்

ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப 

நீடுக மன்னோ விரா

வாசிக்க

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா

தெளிவுரை

காதலி இன்னும் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு

 யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக;

யாப்பிலக்கணம்



1328.ஊடலுவகை

 

133.ஊடலுவகை

3.காமத்துப்பால்-3.2.கற்பியல்-3-2-133.ஊடலுவகை-1328

குறள் மூலம்

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலிற் றோன்றிய வுப்பு

வாசிக்க

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு

தெளிவுரை

நெற்றி வியர்க்கும்படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை,

 ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.

யாப்பிலக்கணம்



1327.ஊடலுவகை

133.ஊடலுவகை

3.காமத்துப்பால்-3.2.கற்பியல்-3-2-133.ஊடலுவகை-1327

குறள் மூலம்

ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னும்

கூடலிற் காணப் படும்

வாசிக்க

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்

தெளிவுரை

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர்; அந்த உண்மை,

ஊடல் முடிந்தபின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்;

யாப்பிலக்கணம் 



1326.ஊடலுவகை

 

133.ஊடலுவகை

3.காமத்துப்பால்-3.2.கற்பியல்-3-2-133.ஊடலுவகை-1326

குறள் மூலம்

உணலினு முண்ட தறலினிது காமம்

புணர்தலி னூட லினிது

வாசிக்க

உணலினும் உண்டது அறல்இனிது: காமம்
புணர்தலின் ஊடல் இனிது

தெளிவுரை

உண்பதைவிட முன் உண்ட உணவு செரிப்பது இன்பமானது;

அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது;

யாப்பிலக்கணம்



1325.ஊடலுவகை

 

133.ஊடலுவகை

3.காமத்துப்பால்-3.2.கற்பியல்-3-2-133.ஊடலுவகை-1325

குறள் மூலம்

தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ

ளகறலி னாங்கொன் றுடைத்து

வாசிக்க

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்குஒன்று உடைத்து

தெளிவுரை

தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின்

மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது,

யாப்பிலக்கணம்



1324.ஊடலுவகை

 

133.ஊடலுவகை

3.காமத்துப்பால்-3.2.கற்பியல்-3-2-133.ஊடலுவகை-1324

குறள் மூலம்

புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்

னுள்ள முடைக்கும் படை

வாசிக்க

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை

தெளிவுரை

காதலரைத் தழுவிக் கொண்டு விடாமலிருப்பதற்குக் காரணமான ஊடலுள்,

என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது;

யாப்பிலக்கணம்



1323.ஊடலுவகை

 

133.ஊடலுவகை

3.காமத்துப்பால்-3.2.கற்பியல்-3-2-133.ஊடலுவகை-1323

குறள் மூலம்

புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து

வாசிக்க

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீர்இயைந் தன்னார் அகத்து

தெளிவுரை

நிலத்தோடு நீர் பொருந்திக் கலந்தாற்போன்ற அன்புடைய காதலரிடத்தில்

 ஊடுவதைவிட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதோ?.

யாப்பிலக்கணம்



1322.ஊடலுவகை

 

133.ஊடலுவகை

3.காமத்துப்பால்-3.2.கற்பியல்-3-2-133.ஊடலுவகை-1322

குறள் மூலம்

ஊடலி்ற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும்

வாசிக்க

ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்அளி
வாடினும் பாடு பெறும்

தெளிவுரை

ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல

அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்;

யாப்பிலக்கணம்



1321.ஊடலுவகை

 

133.ஊடலுவகை

3.காமத்துப்பால்-3.2.கற்பியல்-3-2-133.ஊடலுவகை-1321

குறள் மூலம்

இல்லை தவறவர்க் காயினு மூடுதல்

வல்ல தவரளிக்கு மாறு

வாசிக்க

இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு

தெளிவுரை

அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானாலும், அவரோடு ஊடுதல்,

அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்யவல்லது.,

யாப்பிலக்கணம்



1330.ஊடலுவகை

  133.ஊடலுவகை 3.காமத்துப்பால்-3.2.கற்பியல்-3-2-133.ஊடலுவகை-1330 குறள் மூலம் ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங் கூடி முயங்கப் பெறின் ...